Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் ரத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு: ஏ.சி சண்முகம்

ஏப்ரல் 17, 2019 05:23

வேலூர்: வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரம் குடியாத்தம், ஆம்பூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.   

இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏ.சி சண்முகம்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தின் முறையீடு அவசர வழக்காக இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது.

தலைப்புச்செய்திகள்